Wednesday, August 1, 2007

அட! பரவாயில்லையே!!

முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் நமது கைப்புள்ளைகளை கடுமையாக விமர்சித்து விட்டேன். அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள். எப்படியோ இது போல வென்று அவர்களும் மகிழ்ந்து நம்மையும் மகிழ்வித்தால் சரிதான். (இப்படித்தான் இடையிடயே ஜெயிச்சு நம்மளயும் உசுப்பேத்தி விடுறாய்ங்க)

இந்த போட்டியின் வெற்றிக்கு காரணங்களாக நான் கருதுவது இரண்டு. முதலில் ஜஹிர் கானின் அற்புதமான பந்து வீச்சு. இரண்டாவது நான் கடந்த இடுகையில் விமர்சித்த அதே துவக்க இணை.

மேலும், இங்கிலாந்து அணியின் பலவீனமான பந்து வீச்சை நமது அணியின் முதல் ஆறு மட்டையாளர்களும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இதை முதல் போட்டியிலேயே செய்திருக்க வேண்டும். சரி, இப்போவாவது புத்தி வந்ததே. இங்கிலாந்தை சொற்ப ஓட்டங்களுக்கு சுருட்டிய பின், நமது துவக்க ஆட்டக்காரர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர் பின்னால் வந்தவர்கள்.



இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் அற்புதமாக பந்து வீசினார் ஜஹிர் கான். அவருக்கு கும்ப்ளே மட்டுமே சிறிதளவாவது துனை புரிந்தார். ஸ்ரீசாந்த் பந்து வீச்சும், தேவயில்லாத முறைப்புகளும் சின்னப்புள்ளத்தனமாகவே உள்ளது. காலம் அவரை பக்குவப்படுத்தட்டும். மீதமுள்ள டெஸ்ட்டை வென்றோ டிரா செய்தோ இத்தொடரை வென்றால் 20+ வருடங்களுக்கு பிறகு இந்தியா இங்கிலாந்தில் தொடர் வென்ற பெருமை(??)யை பெரும்.

இந்த தொடரிலும் ஸ்லெட்ஜிங் சூடு பிடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது கார்த்திக் பேட்டிங் செய்த போது இங்கிலாந்து விக்கெட் கீப்பரிடமிருந்து கடும் சுடும் சொற்கள் வந்து விழுந்தன. அதை மறுமுனையிலிருந்து பார்த்துகொண்டிருந்த "தாதா" (கங்குலி) இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வானிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். நம்ம தாதா- தாதா தான். :) பின்னர் இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்ரீசாந்த் தேவையில்லாமல் முறைத்து பதில் முறைத்தல்களை வாங்கி கட்டிக்கொண்டார். அதற்குப் பின்னர் நடந்ததுதான் சுவராஸ்யம். ஜஹிர் கான் பேட்டிங் செய்ய வந்த போது ஆடுகளத்தில் ஒரு ஜெல்லி பீன்ஸ் (Jelly Beans) கிடந்துள்ளது. அதை ஆடுகளத்திலிருந்து நீக்கியுள்ளார் ஜஹிர் கான். அடுத்த பந்த சந்திக்கும் முன்பு மீண்டும் ஒரு ஜெல்லி பீன்ஸ் ஆடுகளத்திற்கு புதிதாக கிடந்துள்ளது. அதைப் பார்த்த ஜஹிர் கான் கடுப்பானார். நீங்களே பாருங்கள் மீதியை.



அந்த பிரச்சனைக்குரிய ஜெல்லி பீன்ஸ் இதுதான்:


இந்த நிகழ்ச்சி குறித்து ஜஹிர் கான்:

"When I was batting, there were some jelly beans on the crease, so I chucked one off the wicket," he said. "When I played the next ball there were again some jelly beans on the wicket. So obviously there was someone throwing it on the wicket, which I didn't like. So I just went up to them and said, 'Guys, what's this all about. I'm here to play cricket.' And they came at me. And I just sort of felt upset. And I just reacted."

Surprisingly Zaheer didn't go after Alastair Cook, fielding at short leg, but directed his ire at Pietersen at gully. "I didn't know where exactly it was coming from," he said. "Maybe I picked the wrong one [Pietersen] but I was just not bothered at that time. I just felt it was insulting. It was definitely from a fielder because if it was placed unknowingly, it shouldn't have come there again when I removed it."

Paul Collingwood preferred to get cheeky when asked about the incident - "I think he prefers the blue ones to the pink ones" - but Zaheer didn't think there was a comical side. It's been a series packed with such on-field action but Zaheer felt England were going one step too far. "We're here to play cricket, that's what we're looking forward to do whole series. I don't really want to go in detail. I'm here to play cricket and enjoy my cricket."



பழிவாங்கும் விதமாக பீட்டர்சன்னுக்கு ஸ்ரீசாந்த்: