Wednesday, August 10, 2011

இந்தியாவின் எழுச்சி

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட்டுகளை இழந்திருக்கிறது. 10ம் தேதி நடந்த மூன்றாம் டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்தை 1 இன்னிங்க்ஸ் மற்றும் 245 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்தது.

இந்தியாவின் எழுச்சிக்கான மூல காரணமாக வீரேந்தர் சேவாக்கும் கவுதம் கம்பீரும் அமைந்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து, அமித் மிஸ்ரா மற்றும் ப்ரவீன் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் 80 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 630 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் சேவாக் 323 ரன்களும், கம்பீர் 227 ரன்களும், டிராவிட்டின் 56 ரன்களும் அடக்கம். சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பேட் செய்யவே இல்லை.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து தனது அனைத்து விக்கட்டுகளையும் 305 ரன்களுக்கு இழந்தது.

இந்தியாவின் இந்த வெற்றியை இந்தியா சுதந்திர தினத்துக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஆட்டநாயகனாக சேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் ஆகஸ்ட் 18 லண்டனில் நடப்பதாக இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் இந்த அபார வெற்றி ஆங்கிலேயர்களைக் கொதிப்படைய வைத்துள்ளதால் லண்டனில் மாபெரும் கலவரம் நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள - உடான்ஸ் டிவியைப் பாருங்கள்.

2 comments:

அச்சு said...
This comment has been removed by the author.
அச்சு said...

கடுப்பேத்துறீங்க மைலார்ட்..