Saturday, August 20, 2011

இந்தியாவின் கனவு டெஸ்ட் அணி

மக்கா... எல்லாரும் நல்லா இருக்கீங்களா??

ரொம்ப நாள் ஆச்சு.. ஏதாச்சும் நாரதர் கலகம் பண்ணி.

இப்ப எனக்குப் பிடிச்ச இந்திய டெஸ்டின் கனவு அணியைச் சொல்லப் போறேன்.

இதுல ஒவ்வொருத்தர் ஆட்டமும் பெஸ்ட்னு சொல்ல முடியாட்டியும் அவங்க இருந்தா இன்னைக்கு இங்கிலாந்தில் போராடும் மக்களுக்கு உதவியா இருந்திருக்கும்.

என்னோட கனவு அணி:

சுனில் கவாஸ்கர் & வீரேந்தர் சேவக் - ஓபனிங்

சேவக் அக்ரசன் ஆப்போசிட் டீமுக்கு எப்பவும் பயம் தரும். கவாஸ்கரை நம்பி பெட் கட்டலாம்... இந்த பாலை அடிக்க மாட்டாருன்னு.. அந்த ஸ்டபிலிட்டி நம்ம ஓபனிங் காம்பினேசன்ல யாரும் இன்னும் தரல. ஒரே மேட்ச்ல கம்பீர் அந்த எபிலிட்டிய காட்டினார். நியூசிலாந்து மேட்ச்... அது மாதிரி இன்னும் இன்னொரு பெர்ஃபார்மன்ஸ் தரல...

ராகுல் ட்ராவிட் - ஒன் டவுன்

மனுசன் ராட்சசன்... க்ரைண்டிங் த ஆப்போசிசன்னு சொன்னா அண்ணன் தான்.

விவிஎஸ் லக்‌ஷ்மண் - செகண்ட் டவுன்

இந்த ஆளையும் ட்ராவிட்டையும் நம்பி அடுத்து இறங்க வேண்டிய ஆள் ரெஸ்ட் ரூம்ல தூங்கலாம்.. ஆனா விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு முக்கியமான பிரச்சினை, ஹி நீட்ஸ் ப்ரஷ்ஷர்..

குண்டப்பா விஸ்வநாத் - அடுத்த டவுன்

அருமையான ப்ளேயர்... அழகா, எலிகண்டா ஸ்ட்ரோக் ஆடுவார்.

திலிப் வெங்சர்க்கார் (அ) மொஹிந்தர் அமர்நாத்

சூப்பரான ப்ளேயர். கன்சிஸ்டண்டா ஆடுவார்

கபில்தேவ் (கேப்டன்) - அருமையான ஆல்ரவுண்டர் என்பதே இந்த பொசிசனுக்கு போதும். கேப்டன் பதவி கொடுத்ததுக்கு முக்கிய காரணம் மனுசன் ஒன்னுக்கும் ஒதவாத டீமையே வேர்ல்டு கப் வரை கொண்டு போனவர்.

கிர்மானி - விக்கட் கீப்பர் - யாராவது இதை அப்போஸ் பண்ணீங்கன்னு வச்சுக்கங்க... கொன்னுட்டேன் உங்களை..

ஜாகிர்கான் & கும்ப்ளே - ரெண்டு விக்கட் டேக்கிங் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்ஸ் :)))

ஹர்பஜனைப் பவுலரா போடலாம்னா பயமா இருக்கு...

பிஷன் சிங் பேடி - இவரை கடைசி ஆளா போடலாம். 266 விக்கட் எடுத்திருக்காப்புல...

ட்வெல்த் மேனா வேணும்னா சச்சினை சேர்த்துக்கலாம்.

Wednesday, August 10, 2011

இந்தியாவின் எழுச்சி

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட்டுகளை இழந்திருக்கிறது. 10ம் தேதி நடந்த மூன்றாம் டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்தை 1 இன்னிங்க்ஸ் மற்றும் 245 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்தது.

இந்தியாவின் எழுச்சிக்கான மூல காரணமாக வீரேந்தர் சேவாக்கும் கவுதம் கம்பீரும் அமைந்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து, அமித் மிஸ்ரா மற்றும் ப்ரவீன் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் 80 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 630 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் சேவாக் 323 ரன்களும், கம்பீர் 227 ரன்களும், டிராவிட்டின் 56 ரன்களும் அடக்கம். சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பேட் செய்யவே இல்லை.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து தனது அனைத்து விக்கட்டுகளையும் 305 ரன்களுக்கு இழந்தது.

இந்தியாவின் இந்த வெற்றியை இந்தியா சுதந்திர தினத்துக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஆட்டநாயகனாக சேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் ஆகஸ்ட் 18 லண்டனில் நடப்பதாக இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் இந்த அபார வெற்றி ஆங்கிலேயர்களைக் கொதிப்படைய வைத்துள்ளதால் லண்டனில் மாபெரும் கலவரம் நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள - உடான்ஸ் டிவியைப் பாருங்கள்.