Wednesday, July 25, 2007

தொடரும் கைப்புள்ளைகளின் வீரம்...

"என்னத்த சொல்றது?" அப்படின்னு நினைச்சு விடவும் முடியல. அதாங்க நம்ம கைப்புள்ளைகள் வாங்கி கட்டுவதை இன்று நிறுத்துவார்கள் நாளை நிறுத்துவார்கள் என்று நானும் பெருங்கனவுதான் காணுறேன். நிறுத்துவேனா என்கிறார்கள்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தடுமாறி இந்தியா தோற்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவை விட்டு இவர்கள் விமானம் புறப்படும் போதே மானம் ரோசம் தன்னம்பிக்கை எல்லாத்தையும் இந்தியாவிலேயே பத்திரமாக வைத்துவிட்டு செல்வார்கள். இது இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக நடந்து வருவதுதான். அதிலும் இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளென்றால் இன்னும் மோசம். இதுவரை இங்கிலாந்தில் நடந்துள்ள 46 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுந்தான் வென்றுள்ளோம். 23 தோல்விகள் மற்றும் 19 டிரா. இப்படிப்பட்ட ஒப்பற்ற வரலாற்றை கொண்டுள்ள நமது கைப்புள்ளகளிடம் கூடுதல் எதிர்பார்ப்பு கூடாததுதான்.

இருந்தாலும், இப்போதுள்ள இங்கிலாந்து அணியில் பந்துவீச்சு மிக பலவீனமான நிலையில் உள்ளது. வேகப்பந்து வேதளங்கள் Harmisson, Flintoff, Jones இல்லை. இறுதி நேரத்தில் காயம் காரணமாக Hoggord-ம் இல்லை. மேலும் சுழற்பந்து வீச்சாளர் Giles-ம் இல்லை. இதை விட வேறென்ன வேண்டும் இவர்களுக்கு? தற்போதுள்ள Anderson, Sidebottom (சூப்பர் பேரு!!), Tremlett மற்றும் Panesar இவர்களில் Anderson மட்டுமே சிறிது அனுபவமுள்ளவர். இவர்களை சமாளிக்க இந்த இந்திய அணியால் முடியும் என்றே நம்பியிருந்தேன்.

முதல் போட்டி கிரிக்கெட்டின் புனித தலத்தில். லார்ட்ஸில். இந்திய மும்மூர்த்திகளுக்கும் லட்சுமனன் மற்றும் கும்ப்ளேவிற்கு இதுவே இறுதி போட்டியாக அமையும் இந்த மைதானத்தில் என்றொரு சூழல். இதுவரை சச்சின் இங்கு ஒரு சதம் கூட அடித்ததில்லை (சுயநலத்திற்கு கூட இல்லை). அது அவருக்கு பெரும் ஏமாற்றமகாக் கூட இருந்திருக்க கூடும். எப்படியாவது இந்த மாதிரி பந்து வீச்சை சமாளித்து சதமடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரும் நமது அணியும் வழக்கம்போல் தங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டனர். முன்னனி வீரர்கள் அனைவரும் தடுமாறினார்கள். கேவலம்! பந்து வீச்சு முதல் நாள் ஆட்ட முதல்-பகுதி (Session) தவிர நன்றாகவே பந்து வீசினார்கள். இருந்தாலும் மட்டையாளர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் எந்தவொரு சூழலிலும் இந்தியாவின் கை ஓங்கியிருக்கவில்லை.

பாவம் இங்கிலாந்து! எளிதாக பெற வேண்டிய இந்த வெற்றியை இடையிடையே மழையால் இழக்கப்பட்ட நேரங்களுடன் சேர்த்து இறுதி நேரத்திலும் வெளிச்சமின்மை காரணத்தால் இந்த போட்டியை டிரா என்று, கொஞ்சம் கூட அதுக்கு தகுதியில்லாத இந்தியாவுடன் பங்கு போட நேர்ந்தது. 'இந்த போட்டி டிரா ஆனதே தங்களுக்கு வெற்றியை போலுள்ளது' என்று டிராவிட் முதல் எல்லாரும் பெருமிதம் வேறு. வெளங்கும்!

சச்சினின் பொறுப்பற்ற ஆட்டத்தை கபில்தேவ் காட்டமாக தாக்கியுள்ளார்.
"Every time people hope big things from Sachin Tendulkar but often it is only disappointment that we are left with," Kapil told Aaj Tak, a Hindi news channel. "He is thought to be the backbone of the Indian team but many times he has not stood up to the occasion."

"Figures say that Sachin has not been able to perform under pressure," he said. "Sachin has big records to his name but until he wins matches for India in these conditions, people will raise fingers at him."


சச்சின் மட்டுமில்லை, மும்மூர்த்திகள் மூவரும் பொறுப்புணர்ந்து ஆடினாலே போதும். வெளிநாடு ஆடுகளங்களில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் டிராவிட்டின் பங்கு மிக இன்றியமையாதது. மேலும், எனக்கென்னவோ தற்போதுள்ள துவக்க ஆட்ட இணை சரியானதகவே தோன்றவில்லை. என்ன செய்வது? இந்திய கிரிக்கெட்டை அரசியலும், வணிகமும் மாறி மாறி ஆளும் வரை கிடைத்த (தேர்ந்தெடுக்கப்பட்ட அணியை) வைத்து நாமும் திருப்தி அடைந்துகொள்ள வேண்டிய நிலை. வென்றால் மகிழவும் தோற்றால் கிழிக்கவும் செய்ய வேண்டியது தான். எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் இந்த கைப்புள்ளைகள்!

2 comments:

Anonymous said...

இவர்களை பற்றி இன்னுமா எழுதுகிறீர்கள்?

Naufal MQ said...

//இவர்களை பற்றி இன்னுமா எழுதுகிறீர்கள்
//

அதுக்காக விட்ற முடியுமா அனானி?