Showing posts with label சச்சின். Show all posts
Showing posts with label சச்சின். Show all posts

Thursday, March 22, 2012

வாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)



சச்சின் ஒரு சகாப்தம்

99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது..! இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..? சச்சின் சாதிச்சிட்டேப்பா...:-)

சச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான் எழுதியது ஸ்டேடஸ் இது.

ஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒரு சாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.

· 1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.

· 1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.

.இப்படித்தான் சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.

தொடர் தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது.

நான் ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...

என் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்கை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் மிகையில்லை.

சச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விட வில்லை. அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல் உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.

ஒரு நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.

இது போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை, சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.

இதையே சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் பகுத்தறிவாளர்கள்(!!?) பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை எத்தனை பேர் அறிவர்..?

அதிலும் 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் அது நிகழ்ந்து விட்டது.

நான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.

அது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.

இளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது.

தன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.

பங்களாதேசத்திற்கு எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள் பொசுங்கிப் போயிருக்கும்...

என்றாளும் சாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்ற வகையில் ஒரு நாள் போட்டிகளில் அவரின் 50வது சதத்தை எதிர் நோக்கி இருக்கும் அவர் ரசிகர்களும், ஊடங்கங்களும்...:-)

Thursday, March 31, 2011

நன்றி மிஸ்பா

 இந்தியா வெற்றி பெற்றதுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்றி சொல்லணும். அதுவும் குறிப்பா பெரிய அண்ணன் மிஸ்பாவுக்கு. அவர்தான் டெண்டுல்கர் குடுத்த முதல் கேட்சை மிஸ் பண்ணி கணக்கை துவங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஒரு மூணு கேட்ச் மிஸ் பண்ணாங்க. 

அப்புறம் பேட்டிங் பண்றப்ப ரொம்ப நேரம்  எதோ டெஸ்ட் மேட்ச்ல ஆடற மாதிரியே ஆடிக்கிட்டு இருந்தான். இவன் ரொம்ப ஸ்லோவா ஆடினதுல கூட விளையாடற வீரர்கள் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சி. அவர் விளையாடிய முதல் 42 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே அவர் அடித்தார். அப்புறம் பவர் ப்ளேல அத சரி பண்ற மாதிரி ஆடியதுக் கைக்குடுக்கலை. ரொம்ப லேட் பண்ணிட்டாங்க அடிச்சு ஆட. 


நேத்து அணியை அறிவிச்சப்ப பொதுவா மொஹாலி பிட்ச் ஸ்பின்னருக்கு உதவாது என்பதால் அச்வின்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் எல்லோரும் நினைச்சதுக்கு மாறா பிட்ச் ஸ்பின்னருக்கு உதவியது. கடைசியா தன் தப்பை ஒத்துகிட்டார் தோனி. இதுதான் அவர்கிட்ட பிடிச்ச விஷயம். எதோ நேத்து இந்தியாவுக்கு நல்ல நேரம். படேல், நெஹ்ரா ரெண்டு பேருமே ஒழுங்கா பந்து வீசினாங்க . 

சனிக்கிழமை இறுதிப்போட்டி மும்பையில், சச்சினின் ஊரில். தனது நூறாவது சதத்தை அங்கே அடிப்பாரா அவர் ?

அன்புடன் எல்கே 

Tuesday, March 1, 2011

சச்சினும் இந்தியாவும் - எழுச்சியின் வரலாறு

எனக்கு சச்சினைப் பிடிக்காது. ஆனா சில சமயங்கள்ல சச்சின் இல்லாத இந்திய அணியை நினைச்சுப் பார்க்கவே முடியாது. இன்னைக்கு சச்சினைப் பத்தின ஒரு ஆர்ட்டிகிள் பார்த்தேன். அப்படியே வாயடைச்சுப் போயிட்டேன். உண்மைலேயே சச்சின் நமக்கெல்லாம் கிடைச்ச கிஃப்ட்.

நாம தான் சரியா உபயோகிக்கல...

பாகிஸ்தான் டெஸ்ட்ல முதுகுல பெல்ட் கட்டிக்கிட்டு கடைசி 14 ரன் எடுக்க முடியாம அவுட்டான போது பாகிஸ்தான் நாடே அழுதிருக்க சான்ஸ் இருக்கு. சச்சினோட கமிட்மெண்டுக்கு எனது சல்யூட்.

இப்ப நாம ஆர்ட்டிகிளுக்கு வருவோம். இந்த ஆர்ட்டிகிள் வந்திருக்கிற இடம் த டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஆர்ட்டிகிளின் தலைப்பு

சச்சினும் இந்தியாவும் : இரண்டு பெரும் எழுச்சியின் வரலாறு

http://timesofindia.indiatimes.com/articleshow/7598432.cms

மனஸ் குப்தா எழுதிய அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உண்மையை அப்படியே எடுத்துரைக்கிறது. அவ்வப்போது சச்சினை அதிகம் புகழவும் செய்கிறது :-)

1990களில் தான் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்தது. அப்போது தான் மன்மோகன் சிங்கும், சச்சினும் தங்களின் பயணத்தை ஆரம்பித்தனர். - Quote

இவர்களின் முயற்சி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு முக்கிய இடம் பெற்றுத் தரும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. - Unquote

கவாஸ்கர் இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்கப் பார்த்தார் என்றால் சச்சின் வெற்றிக்காக உழைத்தார். ரிச்சர்ட்ஸின் அடிதடியும், கவாஸ்கரின் நுணுக்கமும், கபில்தேவின் இதயமும் கொண்டவர் லிட்டில் மாஸ்டர். வயதான பெண்மணிகள் பிரார்த்திக்கவும், வேலை செல்லும் ஆப்பீசர்கள் ஓபி அடிக்கவும், இளம் தலைமுறைக்கு உத்வேகமாகவும் அவதரித்தார் சச்சின் - Quote

ஷார்ஜாவின் மணற்புயல் போல் சச்சின் ஆடும் ஆட்டம்... சென்செக்ஸ் 10000 புள்ளிகள் உயர்வு. இந்தியாவின் அன்னிய செலவாணியும் சச்சினின் சென்ஞ்சுரிகளும் ஒரு சேர உயர ஆரம்பித்தன. ஒரு முறை ஸ்டீவ் வாக் சொன்னது, "நாங்கள் சச்சினிடம் தோற்றுவிட்டோம்". - Quote

இந்தியாவின் சாஃப்ட்வேர் கம்பெனிகள் தங்கள் முத்திரையை பதிக்க ஆரம்பித்த போது, இந்தியாவும் வெளி நாடுகளில் வெற்றிக் கனியைப் பறிக்கத் தொடங்கி இருந்தது.. அதன்பிறகு நடந்ததை உலகம் அறியும். - Quote

20 ஆண்டுகள் கடந்துவிட்டது. கீச்சுக் குரல் கொண்ட சிறுவன் தற்போது லெஜண்ட். உலகின் வேகமான வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் நாமும் ஒன்று. - Quote

சச்சினின் சாதனைகளில் இதுவரை கேட்டிராத சில:

  • 778 பௌலர்கள் சச்சினுக்கு பந்து வீசி இருக்கிறார்கள். அதில் 528 பேரால் சச்சினை அவுட்டாக்க இயலவில்லை. ஒரு முறை கூட.
  • இதுவரை 1145 மணி நேரம் சச்சின் பிட்சில் நின்றிருக்கிறார்.
  • இதுவரை 711 கிமீ ஓடி இருக்கிறார். (ரன் எடுக்க ஓடியவை மட்டும்)
 இந்தியாவின் சாதனைகளில் சில:

  • 1992ல் சென்செக்ஸ், ப்ரைவேட் ஏர்லைன்ஸ் எல்லாமும் ஆரம்பமானது.
  • ஐபிஎல் ஆரம்பம் 2008
  • உலகின் விலை குறைந்த கார் நானோ - 2010
என்னதான் சொன்னாலும், சச்சின் 100 போட்டா அந்த மேட்ச் இந்தியா தோத்திடும்னு தான் சொல்லப் போறேன் :)

நாய் வாலை............ :)

Sunday, July 1, 2007

பூரிக்க வைத்த சச்சினின் ஆட்டம்

கேள்விக்குரிய தேர்வுமுறை, அணிக்குள் மலிந்து கிடக்கும் குடுமிப்பிடி சண்டைகள், மீண்டும் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்தப்படாமை இவையாவும் சேர்ந்து என்னை (இந்திய) கிரிக்கெட்டிலிருந்து தூரப்படுத்தியிருந்தது. கிரிக்கெட் பார்ப்பதும் அதைப்பற்றி நண்பர்கள் வட்டத்தில் கதைப்பதும் குறைந்திருந்தது. செய்திகளில் படிப்பதோடு சரி. ஒரு வித வெறுப்பே இதற்கு காரணம்.

இப்படியிருக்க, சென்ற வெள்ளிக்கிழமை மதிய உணவாக பிரியாணி மூக்குபிடிக்க சாப்பிட்டுவிட்டு கண் அயர்வதற்கு முன் ரிமோட்டை எடுத்து ஒரு ரவுண்ட் வரலானேன். அப்போது சன் நியூஸ் சேனலில் கிரிக்கெட் ஆடுகளத்தை காண்பித்து கொண்டு அருண்லாலும் கல்லினனும் பேசிக்கொண்டிருப்பதை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். 'Live' என்று வேறு கீழே. என்ன கொடுமை இது. சன் டிவியில் நேரடி கிரிக்கெட்டா. இந்திய கிரிக்கெட் நன்றாகத்தான் வளர்ந்துள்ளது(?) என நினைத்துக் கொண்டு பார்க்க தொடங்கினேன். இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது. மற்ற சேனல்களிலும் பார்க்கும்படியான் நிகழ்ச்சிகள் எதுவும் ஓடாததால் தொடர்ந்து பார்க்க முடிவெடுத்தேன்.

ஆட்டம் தொடங்கியபோது தான் தெரிந்தது தமிழில் வர்ணனை என்று. அது அடுத்த கொடுமை. இனிமையான தமிழ் வர்ணனைகள் போய் கொடுமையான முறையில் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். யாரென்றே தெரியவில்லை. அப்துல் ஜப்பார் அய்யா, அன்னிக்கு ஐ மிஸ்டு யூ லாட். உடனே அடித்து பிடித்து டி.டி-யில் நேரடி ஒலி/ஒளிபரப்பு உண்டா என ரிமோட்டை விரட்டினேன். அப்பாடா! அங்கும் இருந்தது. நல்லவேளை பிழைத்தேன்.

சரி ஆட்டம் தொடங்கியது, இந்தியா முதலில் நன்றாகவே பந்து வீசினார்கள். இருந்தும் தெ.ஆப்பிரிக்கா ஒருவாறு சமாளித்து 220+ எடுத்தார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது.

சரி நம்ம பசங்க எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்க ஆர்வம் பிறந்தது. சச்சினும், கங்குலியும் களமிறங்கினார்கள். அப்புறம்தான் ஆரம்பித்தது அந்த இனிய அனுபவம். காண கோடிக்கண் வேண்டும். சச்சின் அன்று அற்புதமாக ஆடினார். எனக்கு தெரிய கடந்த 4/5 ஆண்டுகளில் சச்சின் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை. சில தருணங்களில் அவரை ஏன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்கிறார்கள் என்பதை உணர்த்தினார். ஆண்ட்ரூ நெல் பந்தில் அவர் அடித்த 'ஸ்கொயர் கட்'கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. அன்று அவர் அத்தனை நேர்த்தியாக ஆடினார். 'க்ளாஸிக்' ஷாட்ஸ் என்று சொல்வார்களே அது அனைத்தையும் அவர் ஆடினார். ஹூக், அந்த ஃபேவரிட் கவர் ட்ரைவ் எல்லாமே அத்தனையும் அவர் நினைத்தது போல். ஆக்ரோஷமான ஆட்டமெல்லாம் இல்லை அது. நிதானமான, ஆனால் தெளிவான ஆட்டம். சச்சின் ரசிகனல்லாத எனக்கே அன்று பூரிப்பு தந்த ஆட்டம் அது. 106 பந்துகளில் 93 ஓட்டங்கள் (13 நான்குகள் 2 ஆறுகள்). நன்றி சச்சின். ஆனால், மீண்டும் இது போல ஆட்டத்தை தர 4/5 ஆண்டுகள் எடுத்து விடாதீர்கள். முக்கியமாக சேசிங்கில் சச்சின் இப்படி ஆடியது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சூப்பர் சச்சின்!

மறுமுனையில் எங்கள் 'தாதா' திணறி திணறி ஆடிக்கொண்டிருந்தார். சச்சினும் கங்குலியும் ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு ஆடினார்கள். பழைய பகைகள் மறைந்தது போல தோன்றியது.



அதில் வென்றார்கள் என்பதற்காக பூசல்களும் குழப்பங்களும் தீர்ந்துவிட்டது என்று பொருளில்லை என எல்லாருக்கும் தெரியும். இனி இதுபோல நேரம் கிடைக்கும்போது போட்டி காண நேரிட்டால் சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட ஆட்டம் காண கிடைத்தால் மகிழ்வேன்.

Thursday, February 15, 2007

10,000! ட்ராவிட்!!

ராகுல் டிராவிட். இவர் இந்தியாவுக்காக ஆடத்துவங்கிய போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் இவர் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடுவாரென்றோ அல்லது 10000 ரன்கள் எடுப்பாரென்றோ.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இவர் ஒருநாள் போட்டிகளில் இடையிடையே புறக்கணிக்கப்பட்டு வந்தார். இவருடைய தெளிவான, காபி-புக் ஸ்டைல் ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்றனர். இவரால் அதிரடியாக ஆடி ரன் குவிக்க இயலாது என்றனர். இவருடைய ஸ்ட்ரைக்-ரேட் வெகு குறைவாக இருந்த காலம் அது.

2000- 2001 ஆண்டில் இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் தான் இந்தியாவின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்களாக கருதப்பட்ட அசாருத்தீன், ஜடேஜா மற்றும் ராபின்சிங் ஆகியோர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த கால கட்டத்தில் அணித்தலைவர் கங்குலி ட்ராவிட்டையே விக்கெட் கீப்பராக்கி அவருக்கு வாய்ப்பளித்து ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை வைத்து விளையாடும் முடிவுக்கு வந்தார். ட்ராவிட்டின் விக்கெட் கீப்பிங்கும் அத்தனை மோசமானதாக இருந்ததில்லை. அதற்கு பின்பு தான் அவர் தன்னுடைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார் ஒருநாள் போட்டிகளில். அவருடைய ஸ்ட்ரைக்-ரேட் ஆவரேஜ் வெகுவாக கூடியது இந்த கால கட்டங்களில் தான். இந்தியாவும் அதிகமாக வெற்றிகளை குவித்ததும் இந்த கால கட்டங்களில் தான்.

பின்பு தனக்கென ஒரு இடத்தை ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் தக்க வைத்துக் கொண்டார். இப்போது உள்ள நிலையில் ட்ராவிட் இல்லாத மிடில் ஆர்டர் (ஒருநாள் அணியில்) நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. தற்போது அவர் 300க்கும் மேலானா போட்டிகளில் ஆடி விட்டார். 10000 ரன்களையும் அவர் குவித்து விட்டார். சபாஷ் ட்ராவிட். பத்தாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர். ஆறாவது வீரர் உலகளவில். வாழ்த்துக்கள் காப்டன்!

கீழே பத்தாயிரம் ரன்களை குவித்த வீரர்கள் பட்டியல் அவர்கள் பத்தாயிரம் ரன்கள எடுக்க எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் சச்சின் வெகு குறைவான இன்னிங்ஸ்களை மட்டும் எடுத்துள்ளார் பத்தாயிரம் அடிக்க. அடுத்து நம்ம தல கங்குலி வருகிறார்.

சச்சின் - 259 இன்னிங்ஸ்: 10,105 ரன்கள்: 42.63 சராசரி
கங்குலி - 263 இன்னிங்ஸ்: 10,018 ரன்கள்: 41.22 சராசரி
லாரா - 278 இன்னிங்ஸ்: 10,019 ரன்கள்: 40.56 சராசரி
ட்ராவிட்- 287 இன்னிங்ஸ்: 10,044 ரன்கள்: 39.08 சராசரி
இண்ஜமாம் - 299 இன்னிங்ஸ்: 10,018 ரன்கள்: 38.98 சராசரி
ஜெயசூர்யா - 328 இன்னிங்ஸ்: 10,057 ரன்கள்: 32.13 சராசரி

இம்மும்மூர்த்திகளும் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தருவார்களா?