Saturday, February 26, 2011

புலியின் பாய்ச்சல்

நேற்றைய பங்களாதேஷ் - அயர்லாந்து போட்டியினைப் பார்த்தவர்கள் இதயம் இடம் மாறித் துடித்திருக்கும். போன முறை உலகக் கோப்பையில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பங்களாதேஷ் முதலில் ஆடி 205 ரன்கள் மாத்திரம் எடுத்ததும் மனம் மிக வருத்தமுற்றது.

மிர்பூர் கூட்டத்தில் கூட சோபிக்காமல் இவர்கள் எதற்கு உலகக் கோப்பை ஆடவேண்டும்? என்ற எண்ணம் உண்டாகி இருந்தது. என் பக்கத்தில் இருந்த பங்களாதேஷ் நண்பனிடம் உதார் விட்டுக்கொண்டிருந்தேன். நீங்க முதல்ல எங்க ஊரு க்ரிக்கெட் டீமை ஜெயிச்சிட்டு அப்புறமா உலகக் கோப்பைல ஆடுங்கடா என்றெல்லாம் வெட்டி பந்தா பேசிக் கொண்டிருந்தேன்.

என்ன மாயம் நடந்தது என்றே யோசிக்க இயலாத பொழுதில் பட்டென்று ஆட்டம் சூடுபிடித்தது. இந்த ஆட்டத்தில் அஷ்ரஃபுல்லின் இரண்டு விக்கட்கள் யாரும் எதிர்பாராதது.

என்ன வேலைக்காக டீமில் சேர்ந்தோமோ அதைச் செய்யாமல் இன்னொரு வேலையில் சிறப்பாக விளையாடிய அஷ்ரஃபுல்லை என்ன சொல்ல?? ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட அஷ்ரஃப், இரண்டு விக்கட்டுகளை எடுத்து தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டார்.

அயர்லாந்து கட்டாயம் ஜெயித்துவிடும் என்ற நிலையிலிருந்து தோல்வியுற்றதை நிச்சயம் நான் எண்ணிப்பார்க்கவில்லை.

எதற்கும் பயப்படாமல், வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு, இறுதிவரை போராடி வெற்றி பெற்ற பங்களாதேஷுக்கு வாழ்த்துகள்.

வெற்றிகள் தொடரட்டும்.

இந்தியா vs இங்கிலாந்து

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் மூடிக்கிடந்த ஆடுகளத்தில் இன்று முதல் களம் இறங்குகிறோம் நாங்கள். உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் 

உலகக் கோப்பை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகப் போகிறது. முதல் வாரப் போட்டிகளில் பெரிதாக அதிர்ச்சி தரும் வகையில் எந்த போட்டிகளும் அமையவில்லை. நெதர்லாந்து அணி மட்டும் இங்கிலாந்தை தோற்கடிக்கும் நிலைக்கு சென்றாலும் அனுபவம் இல்லாதக் காரணத்தால் வெற்றிப் பெற இயலாமல் போனது.  நேற்றையப் போட்டியிலும் அயர்லாந்து அணி வங்காளதேசத்தை குறைந்த ரன்களுக்குள் சுருட்டினாலும் , வெற்றிப் பெற இயலவில்லை. மற்றப் படி அனைத்துப் போட்டிகளும் எதிர்பார்த்தவாறே அமைந்தன.


இன்றைக்கு இரண்டாவது வாரம் ஆரம்பிக்கிறது. இன்றையப் போட்டியில் இலங்கை பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களுருவில் நடக்க உள்ளது. 

நேற்றையப் பயிற்சியின் பொழுது சேவாகிற்கு அடிபட்டது இந்தியாவிற்கு பின்னடைவே. ஆனால் அவர் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என்றுக் கூறப் படுகிறது. நாளை மதியம்தான் அவர் ஆடுவாரா இல்லையா என்ற விவரம் தெரிய வரும். அவர் ஆடாவிட்டால் அவருக்கு பதில் ரெய்னா ஆட வாய்ப்புகள் உள்ளது. அதே போன்று இந்தியா இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆடவும் வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்து பொதுவாக லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியுள்ளதாலும், இதே பெங்களுருவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நன்றாக பந்து வீசியதாலும் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக சாவ்லா ஆட வாய்ப்பு உள்ளது .

இந்திய அணியின் பலம் பேட்டிங் . எனவே டாஸ் ஜெயித்தால் முதலுள் பேட் சேது முன்னூறு ரன்களுக்கு மேலே அடிக்க முயற்சி செய்வார்கள். . பந்த்வீசை பொறுத்தவரை ஜாஹீர்க்ஹான்,ஹர்பஜனையே நம்பி உள்ளது. துவக்க ஆட்டத்தில்  நன்றாக பந்து வீசியதால் முனாப் படேல் ஆட வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஆன பீட்டர்சன்,ட்ராட்,பெல் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. ஆனால் அணித்தலைவர் ஸ்ட்ராஸ் மற்றும் கோளின்க்வுட் இருவரும் இந்திய ஆடுகளங்களில் முக்கியமான வீரர்கள். ஸ்ட்ராஸ் அதிரடி ஆட்டக்காரர் இல்லை. ஆனால் களத்தில் நிலைத்துவிட்டால் அவரை அவுட் செய்வதுக் கடினம். அதே போன்றுதான் காளிங்க்வுட்டும் . அவரது பந்துவீசும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு உள்ளது,.


இங்கிலாந்தின் பந்து வீச்சில் சுழற்பந்துவீச்சாளர் ச்வானை இந்தியா கவனமுடன் ஆடவேண்டும். இன்றைய சுழற்பந்துவீச்சாளர்களில் மிக அருமையாக பந்துவீசுபவர்  என்றுப் பேசப்படுபவர் அவர். அதேபோல் பிராட் ,ஆண்டர்சன் போன்றோரும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்களே. ஆண்டர்சன் பாலை ஸ்விங் செய்வதில் கில்லாடி. எனவே , இந்தியா டாஸ் ஜெயித்தால் முதலில் ஆடுவதுதான் சரியாக இருக்கும். மாலை நேரத்தில், பால் ஸ்விங் ஆக வாய்ப்புகள் உள்ளது. 

கிட்டத்தட்ட சமபலத்தில் இருந்தாலும், பேட்டிங்கில் இந்தியா அதிகபலத்துடன் இருப்பதால் இந்தியா வெற்றிப் பெற வாய்ப்புகள் அதிகம்.




அன்புடன் எல்கே 


Sunday, October 5, 2008

வந்துட்டோம்ல!

"வந்துட்டோம்ல!"... அப்படின்னு நம்ம 'தாதா' அணிக்கு திரும்பியதை பத்தி சொல்லலைங்க. அவர் எப்போ அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார் மீண்டும் திரும்பி வந்தார்னு சொல்றதுக்கு? ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை? தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா? 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை! இது போல தலைப்பையெல்லாம் கங்குலியும் சரி நாமும் சரி கடந்த கொஞ்ச காலாம பாத்துக்கிட்டுத்தான் வருகிறோம். நமக்கொன்றும் புதிதல்ல.

அதற்காக, கடந்த இரு தொடர்களைப் போலல்லாமல் தாதாவும் சரி அவரோட பங்காளிங்களும் (அதாங்க மூத்த வீரர்கள்) சரி 'வாம்மா மின்னல்!' மாதிரி பிட்சுக்கு வந்துட்டு போகாம, நிலைச்சு நின்னு ஆடனும். குறிப்பா நம்ம டிராவிட். அவரது ஆட்டத்தின் வீழ்ச்சியே நமது அணியின் அண்மைய மோசமான தோல்விகளுக்கும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டைமைக்கும் காரணம் என்பது எனது எண்ணம். அவரது ஆட்டத்தை சுற்றியே நமது அணியின் பேட்டிங் உள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தேர்வு கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் நம்மூர்காரர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம். பத்ரிநாத்தின் தேர்வும் ஸ்ரீகாந்தின் தலைமைப்பதவியும் ஒரு கோ-இன்ஸிடண்ட். அவரது தேர்வில் அரசியல் இல்லையென்றாலும், கிரிக்கெட்டில் அரசியலில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் பத்து பேர் சேர்ந்து ஒரு அணியோ அல்லது அமைப்போ அமைக்கும் போது, அதில் அரசியல் இருக்கும் போது இவ்வளவு வருமானம் (பி.சி.சி.ஐ-யின் இந்தாண்டு வருமானம் 1000 கோடியாம்) வரும் அமைப்பினுள் அரசியலில்லாமல் இருக்குமா. இதெல்லாம் சகஜமப்பா!

இதற்கிடையில், ஒருவர் மீன் பிடிக்க சென்றதால் தனது அணியில் இடத்தை இழந்துள்ளார். அதனால் இலாபம் இந்தியாவிற்கே. சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். நிச்சயம் ஆஸி-க்கு அவரது இழப்பின் வலி தெரியவரும். இருந்தாலும், இது போல கடுமையான தண்டனைகளை மற்ற அணி நிர்வாகங்களும் கடைபிடிக்கலாம் என்பது எனதெண்ணம்.

இம்முறை ஆஸி அணி சற்று வலு குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவிற்க்கு இம்முறை வெல்ல வாய்ப்பு கூடுதலே.

இன்னமும், 'வந்துட்டோம்ல' தலைப்புக் காரணம் சொல்லல இல்ல... அதாவாது நான் கடைசியாய் பதிவிட்டது கடந்த இந்தோ-ஆஸி தொடர் முடிவில். அதன் பிறகு இப்பத்தான் முதல் பதிவு. நம்ம மூத்த மிடில்-ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் மாதிரி கொஞ்ச நீண்ண்ண்ட ஓய்வெடுத்து விட்டேன். நான் திரும்பி வந்தது போல அவர்களது ஃபார்மும் மீண்டு(ம்) வரட்டும்.

இனியாவது அடிக்கடி இங்கு சந்திக்கலாம்.... :)