Saturday, March 17, 2007

உ.கோப்பை - சில விதிகளில் திருத்தம்

உலகக் கோப்பைகள் நடந்து கொண்டிருந்தும் இந்தவேளையில் ஐ.சி.சி-யானது தற்போதுள்ள சில விதிகளில் சில திருத்தங்களை செய்ய முன்வந்துள்ளது. இது குறித்து எம்.எஸ்.என் -ல் வெளியான செய்தி:

உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து உலகக் கோப்பை விதிகளில் மாற்றம் செய்ய ஐசிசி ஒப்புக்கொண்டுள்ளது.

டாஸ் போட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஆட்டம் நடைபெறும் போது புதிதாக டாஸ் போடவும், அணியில் வீரர்களை மாற்றம் செய்யவும் வழிசெய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் செயல்பாடுகள் பொது மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டாஸ் போட்ட பின்னர் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டால் மறுநாள் ஆட்டம் நடைபெறும் போது புதிதாக டாஸ் போட
வேண்டும் என விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மாற்றம் உலகக் கோப்பை போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

இதே போல் திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் வீரர்களை மாற்றிக் கொள்ளவும் புதிய திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த ரன்விகிதம் கணக்கிடுவது சூப்பர் எட்டு போட்டிகளுக்கு தகுதி பெறும் அணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments: