Monday, April 2, 2007

உ.கோ நடத்துபவர்களுக்கு அடுத்த ஆப்பு

ஆம். இந்த முறை உலகக் கோப்பை நடத்தும் நாடுகளான மே.இந்திய தீவுகளுக்கு பொருளாதார சிக்கல் மேலும் வலுவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவே இதற்கு காரணம்.

மே.இ அணி நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்தது மூலம் கிட்டத்தட்ட அரை-இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கிறது. மே.இ அணி இனி அரை-இறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில், தெ.ஆ, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். தற்போதய மே.இ அணியின் ஃபார்மை பார்த்தால் தெ.ஆ அணியை வெல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். மற்ற இரண்டு போட்டிகளை வென்று விடும் என கருதினாலும்.



(வேகப்பந்து வீச்சாளர் வாஸின் பந்தில் லாரா ஸ்டம்பிங் செய்யப்பட்டார்)


ஆனால், இப்பொழுதே மே.இ அணி வெளியேறிவிட்டதாக அவர்கள் நாட்டு மக்களும், ஊடகங்களும் முடிவுக்கே வந்துவிட்டார்கள். அவர்கள் அணியின் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். தமது அணி மீது நம்பிக்கை வைப்பதில் நமக்கு ஈடு இணை யாருமில்லை என்று நினைக்கிறேன். பெர்முடா வங்கதேசத்தை தோற்கடிக்கும், அதன் மூலம் இந்தியா சூப்பர் 8-க்குள் நுழையும் என்று நம்பிய நாம் எங்கே. மூன்று போட்டிகளையும் வென்றால் அரை-இறுதிக்கு போகலாம் என்ற நிலையிலும் தமது அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மே.இ தீவு மக்கள் எங்கே. :)

இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு அணியும் வெளியேறிவிட்டதாக கருதப்படும் இச்சூழ்நிலையில் போட்டி ஒருங்கினைப்பாளர்களுக்கு இக்கட்டான நிலை. அதிகளவில் ரசிகர்கள் கொண்ட அணிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறிய போதே சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தவர்களுக்கு மேலும் விழுந்துள்ள அடி இது. ஏற்கனவே ஈ விரட்டிக்கொண்டிருந்த மைதானங்கள் மேலும் வறட்சியுடன் காணப்படும். மே.இ மக்கள் கூட போட்டிகளை காண ஆர்வமிழப்பார்கள். டிக்கெட்டுகளின் விலை மிகக் கூடுதல் என ஏற்கனவே புலம்பிக்கொண்டிருந்தார்கள். மைதானங்களில் நாற்காலிகள் மட்டுமே போட்டிகளைக் காணும் நிலை ஏற்படும். இது இந்த உலகக் கோப்பையில் பெருத்த பின்னடைவாக இருக்கும்.

(ஆஸியுடன் இந்தியா மோத வேண்டிய போட்டியில் வங்கதேசம்- வெறுமையுடன் ஒரு ரசிகை)


இந்தியா, பாகிஸ்தான் வெளியேறியதால் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இவர்களை நம்பி முதலீடு செய்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திலுள்ளனர். இந்தியாவின் தேசியக் கொடிகளும், இந்திய அணியின் சீருடைகளும் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வீணாகப்போகும் நிலை. அனைத்து ஹோட்டல்களும் இப்போது Tour-package-களை மலிந்த விலைக்கு தர முன்வந்துள்ளார்களாம். தள்ளுபடியாம்.

(நேற்றைய போட்டியில் மே.இ ரசிகர்களின் தாராள மனப்பான்மை)

நேற்றைய போட்டியில் மே.இ அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர். லாராவை உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று போட்டியின் இறுதியில் வெருப்பில் மைதானத்திற்குள் கையில் கிடைத்தவற்றை எறிந்தனர்.

இந்த சூப்பர் 8 போட்டிகள் செல்லும் விதத்தை பார்த்தால், ஆஸ்திரேலியா, இலங்கை, தெ,ஆ மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை-இறுதிக்கு வரும்.

ஆக, மற்றொரு இந்தியாவும் அவுட். (இந்தியாவுக்கு இன்ஷியல் வச்சா கூட விரட்டியடிக்கிறாங்கப்பா)

6 comments:

சென்ஷி said...

//இந்தியாவுக்கு இன்ஷியல் வச்சா கூட விரட்டியடிக்கிறாங்கப்பா)//

சூப்பர் கமெண்ட்ங்க :)

சென்ஷி

Naufal MQ said...

வருகைக்கு நன்றி சென்ஷி.

Anonymous said...

Go AUSSIE Go!!!

Naufal MQ said...

//Anonymous said...
Go AUSSIE Go!!!
//

வாங்க தல. இதுல உள்குத்து ஏதுமில்லையே??

மணிகண்டன் said...

இந்த போட்டி நடைபெற்ற பொழுது மே.இ.ரசிகர் ஒருவர் காட்டிய பேனர்

"Come on West Indies, Australia took 2 days to defeat us! "

Naufal MQ said...

//"Come on West Indies, Australia took 2 days to defeat us! "//

மணிகண்டன், அது கலக்கல்.