Sunday, February 25, 2007

ஒருநாள் போட்டிகளிலிருந்து கும்ப்ளே ஓய்வு

உலகக் கோப்பைக்குப் பின் அனில் கும்ப்ளே ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 270 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கும்ப்ளே இதுவரை 334 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 17 உலகக் கோப்பை போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் அவர் பேட்டியளித்த போது தனது ஓய்வு திட்டத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகக் கோப்பையே தனது இறுதி தொடராக இருக்கும்.

உலகக் கோப்பை போட்டிகள் தனக்கு மிகுந்த சவலாக இருக்கும். இருந்த போதிலும்
இந்தியாவிற்கு தனது சிறப்பான பங்களிப்பை அளிக்க இயலும் என்றும் தெரிவித்தார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கிடையே நிறைய வித்தியாசம்
இருப்பதாகவும், 16 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தனக்கு கை
கொடுக்கும் என்றும் கூறினார். உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற
நம்பிக்கையையும் தெரிவித்தார்.

கும்ப்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்து உலகக் கோப்பைக்கு அனுப்பி வைப்போம். 'சென்று வென்று வருக!'


No comments: